Tuesday, April 30, 2024
-- Advertisement--

தமிழ்நாட்டை மோடியிடம் அடகுவைத்துவிட்டார்கள் அதிமுகவினர்..!!! டேபிள் சேரில் புகுந்து போய் சசிகலா கால்லை பிடித்து CM ஆனவர் எடப்பாடி – உதயநிதி ஸ்டாலின்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின். உதயசூரியனுக்கு வாக்களிங்க. மோடி செம கோவமா இருக்காரு தமிழ் நாட்டுக்கு எதுவும் செய்ய மாட்டாரு. ஏற்கனவே தமிழ்நாட்டை பாதி மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீதியும் மோடியிடம் சென்றுவிடும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடி சொல்வதை கேட்பவர். மக்கள் நீங்கள் ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை தான் ஆனால் இன்று யாரோ தமிழ்நாட்டை ஆளுகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நான் என்ன ஊர்ந்து போய் முதலமைச்சர் அனேன்னா என்று கேட்கிறார். டேபிள் சேரில் புகுந்து போய் சசிகலா அம்மாவின் கால்லை பிடித்து முதலமைச்சர் ஆனார்.

தியாகத் தலைவி சசிகலா அம்மா அந்தம்மா உண்மையிலேயே தியாகமா பண்ணாங்க கொள்ளை அடிச்சாங்க ஊழல் பண்ணாங்க கோடி கோடியாக கொள்ளை அடித்ததினால் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாங்க என்று கூறியவர் அதிமுககாரர்களுக்கு தேவை 2 காலு தான் அதில் ஒன்னு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் அந்த அம்மாவோட காலு அந்த அந்தம்மா இறந்த பிறகு தியாகத் தலைவி சசிகலா அம்மாவோட காலு கடைசில அவங்க காலையும் இழுத்து விட்டுட்டாங்க என்று உதயநிதி அதிமுகவை கலாய்த்து பிரச்சாரம் செய்தார்.

அதிமுகக்கு போடும் ஓட்டு மோடிக்கு போடும் ஒட்டு. உதயசூரியனுக்கு ஒட்டு போடுங்க என்று மக்களிடம் கேட்டு கொண்டார் உதயநிதி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles