அருண்ராஜா காமராஜ் பாடகர் நடிகர் இயக்குனர் என அனைத்துப் பரிமாணங்களிலும் வெற்றி பெற்ற ஒரு மனிதர். இவருக்கும் இவரது மனைவி சிந்துஜா அவர்களுக்கும் கோரணா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் எதிர்பாராதவிதமாக அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா நேற்று எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.
கொரோனா தொற்று தாக்குதலினால் மரணமடைந்த மனைவிக்கு இறுதி அஞ்சலி செய்ய கவச உடை அணிந்து வந்திருந்தார் அருண்ராஜா காமராஜ். அவருக்கு கொரோனா இருந்தும் தன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தனது மனைவியின் முகத்தை பார்த்தே ஆகவண்டும் என்று மருத்துவமனையிலிருந்து வந்து இருந்தார்.
இறந்த இந்நிலையில் இருந்த மனைவியைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுத அவர் தனது மனைவிக்கு செய்ய வேண்டிய இறுதி அஞ்சலி காரியங்களை கவச உடையுடன் செய்தார். அவர் இறுதி அஞ்சலி செய்த போது பிக்பாஸ் பிரபலம் பாலா மற்றும் சுரேஷ் மயானத்தில் உடன் இருந்தனர். அந்த வீடியோவை இணையத்தில் பார்த்தவர்கள் மனிதனுக்கு இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது என்று கண்கலங்கி வந்தனர்.
அருண்ராஜா காமராஜ் அவர்களின் நெருக்கமான நண்பர் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு ஆறுதலாக கூடவே இருந்தனர். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் அவர்களை தொட்டு ஆறுதல் கூறிவந்தார்.
கொரோனா நேரத்திலும் ஓயாமல் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி இறப்பிற்கும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் முன்னின்று சில உதவிகளும் செய்துள்ளார்.
உதயநிதியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கொரோனா காலகட்டம் உதய் நீங்கள் முன்னின்று நிற்பது சந்தோசம் என்றாலும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று அன்பு கோரிக்கையும் வைத்து வருகின்றனர் ரசிகர்கள்.