Friday, May 3, 2024
-- Advertisement--

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம் இது தலைமை செயலகமா இல்லை அறிவாலயமா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவர். அதிமுகவை யாராலும் பிரிக்க முடியாது எங்கள் கட்சி அம்மா வழியில் நன்றாக தான் சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்லிய அவர் ஒரு பேட்டியில் கூட அதிமுகவை யாரால் ஆட்டவோ முடியாது அசைக்கவும் முடியாது என்று கூறியவர் இது மிகப்பெரிய இயக்கம் இந்த கொசு ஈக்கெல்லாம் பயப்படுற ஆள் நாங்க கிடையாது என்று கூறியிருந்தார்.

மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குத்துச்சண்டை போட்டிகளை தொடங்கி வைப்பது கபடி போட்டிகளை துவங்கி வைப்பது என்று விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டி வந்தார். விளையாட்டில் ஆர்வம் காட்டிய முன்னாள் அமைச்சர் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வீரர் ஒருவருக்கு பஞ்ச் விட்டது அனைவரும் அறிந்ததே.

ஆளுங்கட்சி பற்றி மறைமுகமாகவும் நேராகவும் கருத்துக்களை தெரிவித்து வரும் ஜெயக்குமார் சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்திற்கு அடுத்து உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி தலைமை செயலகமா அல்லது அறிவாலயமா என்று கேள்வி எழுப்பி உள்ளார் ஜெயக்குமார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles