சிவகங்கை போக்குவரத்து அலுவலகத்திற்கு ஒரே எண்ணுடன் இரண்டு இன்னோவா கார்கள் வந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்தவர் முத்து துரை தூத்துக்குடியை சேர்ந்த உமாதேவியின் பழைய இனோவா காரை விலைக்கு வாங்கியுள்ளார். முத்து துரை தனது பெயரில் இனோவா காரை மாற்ற தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு காரைக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அதே எண்ணுடன் உள்ள காரை சிவகங்கையை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிர்ந்துபோன முத்து துரை இந்த காரை தனக்கு விற்பனை செய்த உமாதேவி என்பவரை சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.
இரு கார்களும் நிறம் நம்பர் பிளேட் அனைத்து ஆவணங்களும் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. 2014ஆம் ஆண்டு இந்த இனோவா காரை வாங்கியதாகவும் தற்பொழுது புது கார் வாங்குவதற்காக இந்த காரை விற்பனை செய்வதாகவும் உமாதேவி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
முத்து கணேஷ் இந்த காரை 20 நாட்களுக்கு முன் தான் தூத்துக்குடியில் உள்ள தரகர் மூலமாக தனியார் கார் விற்பனை நிலையத்தில் வாங்கியதாக கூறினார். குழம்பி போன போக்குவரத்து அதிகாரிகள்
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சிவகங்கை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியது ஆவணங்கள் சரியாக இருந்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது காப்பி செய்துள்ளனர். ஆவணம் போலி என்பதை உறுதி செய்ய முடியவில்லை. காரின் உரிமையாளர் பெயர் இரண்டு ஆவணங்களிலும் உமாதேவி என்றுதான் உள்ளது ஆனால் உமாதேவியின் புகைப்படங்கள் ஒரு ஆவணத்தில் ஒன்றாகும் மற்றொரு ஆவணத்தில் வேறு ஒன்றாகவும் இருக்கிறது விசாரணைக்குப் பிறகு தான் தெரியும் என்ன நடந்துள்ளது என்று கூறியுள்ளனர்.