Sunday, April 28, 2024
-- Advertisement--

மாநாடு திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட இரண்டு பிரபல நடிகர்கள்…!!! யார் தெரியுமா..?

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றி நடைகொண்டிருக்கிறது.கடந்த நவம்பர் 25 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

தமிழில் இதுவரை பெரிதளவு டைம் லுக் கதையை மையமாகக் கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி மிகவும் புத்திசாலித்தனமான கதைகளம் அமைத்த வெங்கட் பிரபுவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இவரை தவிர வேறு எவராலும் கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்க முடியாது என ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இப்படத்தில் எஸ் ஜே சூர்யா தனுஷ்கோடி என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்த தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தனிஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்திருந்ததை பார்த்த வெங்கட் பிரபு முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு அரவிந்த்சாமி தான் பொருத்தமாக இருப்பார் என ஒப்பந்தம் செய்திருந்தார்.

பிறகு அவரிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டார். மேலும் மாநாடு திரைப்படத்தில் ஆரம்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் அரவிந்த்சாமி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் மாநாடு படத்திற்கான கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து விலகினார். பிறகு தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் மாநாடு கதையை கூறினார் வெங்கட் பிரபு. பிறகு சிம்புவும் அவரிடம் படம் குறித்து பேசியுள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் இவரும் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles