திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனது மார்க்கெட்டை இன்றும் தக்க வைத்துள்ளார். ஒரு நடிகை இரண்டு வருடங்கள் தாக்கு பிடிக்க முடியாமல் சினிமாவை விட்டு விலகிப் போகும் இந்த நேரத்தில் திரிஷா பல வருட காலமாக சினிமாவில் முன்னணி நடிகையாக பயணிப்பது பெரிய விஷயமே.
தற்பொழுது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா டப்பிங் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில்தான் த்ரிஷாவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தன்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார் அதுமட்டுமல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
தற்பொழுது திரிஷாவுக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது கொரோனாவில் இருந்து மீண்ட திரிஷா உங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி தற்பொழுது 2022 எதிர்கொள்ள நான் ரெடி என்று பதிவிட்டுள்ளார்.
திரிஷாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரிஷாவிற்கு கொரோனா வந்த மாதிரி தெரியவில்லையே ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் கூறி வருகிறார்கள்.