தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் திரிஷாவும் நயன்தாராவும் பல வருடங்களாக தங்களது இடங்களை தக்கவைத்து வருகின்றனர். த்ரிஷாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு நயன்தாராவிற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை இரண்டு வருடங்கள் தாக்குப் பிடிக்க கஷ்டப்படும் நேரத்தில் இருவரும் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகிகளாக இருப்பது பெரிய ஆச்சரியம்.
திரிஷா மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் த்ரிஷா.
அதுபோல நயன்தாராவும் ஒரு தனியார் டிவி சேனலில் வேலை பார்த்து அதன் பின் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தன் முதல் படத்திலேயே யார் இந்த கேரளத்து வரவு என்று ரசிகர்களை உற்றுநோக்கி வைத்த நயன்தாரா அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
ஒரு நேரத்தில் விஜய் படத்தில் யார் ஹீரோயினாக நடிப்பது என்ற போட்டி நிலவியது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் வெளியான குருவி படத்தில் முதல் முதலாக விஜய்க்கு ஜோடியாக கமிட் ஆனது நயன்தாரா தான்.
அந்த நேரத்தில் விஜய்க்கு ஃபேவரிட் ஜோடியாக கருதப்பட்ட திரிஷா விஜய்யை ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்து நீண்ட நேரம் வாக்கு வாதங்களுக்குப் பிறகு நயன்தாராவை நீக்கிவிட்டு திரிஷா ஜோடி ஆனார். அந்த நேரத்தில் நட்சத்திர ஹோட்டல் அறையில் என்ன நடந்தது விஜய்யும் திரிஷாவும் அப்படி என்ன பேசிக்கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.
நயன்தாராவிற்கும் திரிஷாவிற்கும் சில வருடங்களுக்கு முன் ஒரு சில மனக்கசப்புகள் இருந்து வந்துள்ளது. இருவரும் சில வருடங்கள் பேசிக் கொள்ளாமலேயே இருந்தார்களாம். எந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலும் திரிஷா ஒரு பக்கம் நயன்தாரா ஒரு பக்கம் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்களாம்.
ஒரு பார்ட்டியில் திரிஷா நயன்தாராவிடம் சென்று பேசினாராம் அதன்பின் தான் திரிஷாவும் நயன்தாராவும் சகஜமாக பழக ஆரம்பித்தார்களாம். த்ரிஷாவின் அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரே வந்து பேசிய அந்த குணம் யாருக்கும் வராது என்று கூறிய நயன் அதன் பின் மறுபடியும் நங்கள் சேர்ந்தோம் அந்தப் பார்ட்டியில் எடுத்த புகைப்படம் தான் இது என்பதை ஒரு பேட்டியில் நயன்தாராவே கூறியிருக்கிறார்.