Saturday, May 18, 2024
-- Advertisement--

பிரபல நடிகை திரிஷா மருத்துவமனையில் திடீர் அனுமதி..!!! உடல்நிலை குறித்து அவரே வெளியிட்ட தகவல்.

நடிகை திரிஷா ஜோடி என்ற படத்தில் சிம்ரன் அவர்களுக்கு தோழியாக சில நிமிடங்கள் மட்டும் நடித்து இருந்தார். அதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த அதனைத் தொடர்ந்து ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

இவருக்கு ரசிகர்கள் ஏராளம் தமிழில் மார்க்கெட்டை பிடித்தது போல தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த ராணாவை காதலித்து வந்தார் ஒரு சில காரணங்களால் ராணா த்ரிஷா காதல் முறிந்தது அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி நடித்துவந்த திரிஷா.

சில வருடங்களுக்குப் பிறகு வருண் மணியன் என்ற தொழில் அதிபரை காதலித்து வந்தார் நிச்சயதார்த்தம் முடிந்தது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக வருண் மணியன் திரிஷாவின் திருமணம் நின்றது.

தற்பொழுது தொடர்ந்து சினிமாவில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா தற்போது மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் வெளிவந்த பிறகு திரிஷாவின் நடிப்பை பற்றி இன்னும் ரசிகர்கள் பேசுவார்கள் என்று கூறி வருகிறார்கள் படக்குழுவினருக்கு நெருக்கமான சிலர்.

நடிகை திரிஷா திடீர் என்று மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியது. என்னாச்சி த்ரிஷாவிற்கு திடீர் மருத்துவமனையில் அனுமதி எதற்கு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர்.

தற்போது திரிஷா ட்விட்டர் வழியாக தனது உடல்நிலை பற்றி கூறியுள்ளார் எல்லாம் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தும் புத்தாண்டுக்கு சற்றுமுன் சோதனை செய்து பார்த்தபோது எனக்கு பாசிட்டிவ் வந்தது கொரோனாவின் அறிகுறி எனக்கு இருந்ததால் நான் தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.

இது எனக்கு மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தாலும் நான் தடுப்பூசி ஏற்கனவே போட்டு இருந்ததால் நான் குணமடைந்து உள்ளதை நன்றாக உணர்கிறேன். அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் முகக் கவசங்கள் அணிந்து கொள்ளுங்கள்.

என்னுடைய சோதனைகள் எல்லாம் முடிந்தபின் நான் வீடு திரும்புவேன். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று மகேஷ் பாபு இன்று ஷெரின், திரிஷா என்று தொடர்ந்து பிரபலங்கள் கொரோனா தொற்றினால் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles