திரிஷா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை. நடிக்கவந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றும் சினிமாவில் முன்னணி நடிகையாக நிலைத்து நிற்கிறார். தமிழ் மட்டும் இல்லை தெலுங்குவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஒரு நேரத்தில் காமர்ஷியல் படம் என்றால் முதலில் த்ரிஷாவின் கால்ஷீட்டை போட்டி போட்டு கொண்டு புக் செய்வார்கள் தயாரிப்பாளர்கள் அந்த அளவிற்கு சினிமாவில் பிஸியாக இருந்தார் திரிஷா.
1999 ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்ற திரிஷா சினிமாவில் நடிக்கமாட்டேன் என்று ஆரம்பத்தில் சொன்ன இவர் அதே ஆண்டில் பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான “ஜோடி” என்ற படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து இருந்தார். அதன் பிறகு முதல் முதலில் திரிஷா கமிட் ஆனது லேசா லேசா என்ற படத்தில் நடித்தார் ஆனால் அந்த படம் வெளிவர தாமதம் ஆனதால் அமீர் இயக்கத்தில் “மௌனம் பேசியதே” என்ற படம் முதலில் வெளிவந்தது.
தெலுங்கு திரைப்பட உலகில் நடித்து வந்த போது ராணாவிற்கும் த்ரிஷாவுக்கும் ஏற்பட்ட பழக்கத்தினால் இருவரும் நண்பர்களாக இருந்து அதன் பின் காதலித்து வந்தனர். அதன் பின் இருவரும் பிரிந்தனர் சில காரணங்களால். சில ஆண்டுகள் சிங்கள் ஆக வாழ்ந்து வந்த திரிஷா. சில வருடங்கள் கழித்து வருண் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக செய்திகள் வந்து நிச்சயமும் நடந்து முடிந்தது ஆனால் நிச்சயம் நடந்த பிறகு ஒரு சில மனஸ்தாபத்தால் இருவரும் பிரிந்தார்கள்.
தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் திரிஷா தற்பொழுது நல்ல கதாபாத்திரம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் திரிஷா 21 ஆண்டுக்கு மிஸ் சென்னை வென்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு என் வாழ்கை மாறிய நாள் என்று குறிப்பிட்டு உள்ளார். இன்றைய நாளில் 21 ஆண்டுக்கு முன் திரிஷா மிஸ் சென்னையாக இருந்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.