ஆபாச மெசேஜ்களை தனது வாட்ஸ் அப் எனக்கு அனுப்புவதாக பிரபல நடிகை சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
சனம் ஷெட்டி இவர் பெரிய மாடல் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் என்பவரின் முன்னாள் காதலி என்று அனைவருக்கும் தெரியும். சனம் ஷெட்டியின் வாட்ஸ்அப்க்கு ஆபாச மெசேஜ்களை மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து அனுப்பி வருவதாக அடையாறு சைபர் க்ரைமில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இன்ஸ்டாவிலும் அதுபோல தொடர்ந்து ஆபாச மெசேஜ்கள் வருவதாகவும் புகார் அளித்திருந்தார் சனம். தவறாக மெசேஜ் செய்தவர்களின் மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கண்டு ஆதாரத்தோடு சைபர் க்ரைமில் புகார் அளித்ததால் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
போலீசார் தற்பொழுது சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தவறான மெசேஜ்களை அனுப்பிய ஐடி மற்றும் போன் நம்பரை வைத்து கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தற்பொழுது நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரை போலீசாரிடம் சிக்கியுள்ளார் அவர் ஒரு கல்லூரியில் படித்துவரும் மாணவன் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அவருடைய பெயர் ராய் ஜான்பால்.
திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்து வரும் இவர் சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது அதனைத் தொடர்ந்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏன் சனம் ஷெட்டிக்கு இதுபோன்ற மெசேஜ்களை கல்லூரி மாணவர் அனுப்பினார் என்ற கோணத்தில் தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது.