T .ராஜேந்தர் தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞர்களில் இவரும் ஒருவர். மயிலாடுதுறையில் பிறந்த இவர் நிறைய படங்கள் பார்ப்பார் இவரது லட்சியமே தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான். கல்லூரியில் படிக்கும் போது நீ என்ன ஆக போகிறாய் என்று ஒவ்வொரு மாணவர்களையும் கேட்டார்கள் அப்போது TR நான் இயக்குனர் ஆக போகிறேன் என்று சொன்னவுடன் சில பேர் சிரித்தார்களாம். அவர் செல்லும் ரயிலில் ஏதாவது பாடல்களை மேட்டு போட்டு கொண்டு பாடிவருவாராம் . இயக்குனர் ஆக வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் வந்து தமிழ் சினிமாவில் இயக்குனர் , கதாநாயகன், FILM DISTIRBUTOR மற்றும் இசை அமைப்பாளர் என்று எல்லா துறைகளிலும் சாதித்து காட்டியுள்ளார் TR . ஒரு நடிகனாக மக்கள் ஏத்துக்கொள்வார்களா என்றும் அனைவரும் எங்கும் நேரத்தில் சினிமாவில் புகுந்து தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்று உள்ளார். எதுகை மோனை சொற்களில் புகுந்து விளையாடும் ராஜேந்தர். சிறந்த பேச்சாளர் என்பது ஊருக்கே தெரியும். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த அமலா, நளினி மற்றும் மும்தாஜ் போன்ற கதாநாயகிகளை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ராஜேந்தர் தான். இது வரை எந்த நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காத நடிகர்களில் ராஜேந்தரும் ஒருவர்.
தனது மகனுக்காக கண்கலங்கிய ராஜேந்தர்
ராஜேந்தரின் மகன் சிம்பு சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து கொண்டு இருந்தவரை தனது இயக்கத்தில் “காதல் அழிவதில்லை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்களை கையில் வைத்து இருந்தார் சிம்பு. எதோ அவரது நேரமோ , அல்லது அவரது தவறோ தெரியவில்லை படங்களில் நடிக்கும் நாட்டம் குறைந்து சிம்பு பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். சிம்பு முதலில் காதலித்து யார் என்று ஊருக்கே தெரியும் அதன் பின் நயன்தாராவை காதலித்தார் வல்லவன் என்ற படத்தை இயக்கி நடித்த சிம்பு நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஒரு நிகழ்ச்சியில் பொது மேடையில் சிம்பு நயன்தாராவை ப்ரப்போஸ் செய்தார்.
சில வருடங்கள் சிம்புவும் நயன்தாராவும் காதலித்து வந்தனர் என்ன காரணமோ திடீர் என்று பிரிந்தார்கள். அதன் பின் சிம்பு படங்களில் பெரிதாக பெயர் சொல்லும் அளவிற்கு ஹிட் ஆகவில்லை. காதல் பிரிவினால் வருத்தத்தில் இருந்த சிம்பு. சரியான நேரங்களில் படப்பிடிப்பிற்கு வரவில்லை, கால்ஷீட் சரியாக தரவில்லை என்றெல்லாம் புகார்கள் வந்தது. அதற்கு விளக்கம் கொடுத்தார் சிம்பு.
நீண்ட வருடங்களுக்கு பின் சிம்பு ஹன்சிகா இருவரும் காதலித்து வந்தார்கள். இவர் தான் சிம்புவிற்கு ஜோடி என்று அனைவரும் நினைத்து வந்த நேரத்தில் சிம்பு – ஹன்சிகா காதலில் பிரச்சனைகள் வந்து இருவரும் பிரிந்தனர். இவர்கள் பிரிந்ததற்கு அந்த நேரத்தில் சிம்பு சினிமாவில் பெரிய இடத்தில் இல்லை என்று ஹன்சிகா தாயார் தான் பிரித்ததாகவும் செய்திகள் வந்து கொண்டு இருந்தன.
ஒரு வருடத்திற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ராஜேந்தர் தனது இளையமகன் காதல் திருமணம் செய்து கொண்டதை எப்படி எடுத்து கொண்டீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு ராஜேந்தர் நம் பிள்ளைகளுக்கு பிடித்த பொம்மை வாங்கி தருகிறோம், பிடித்த வண்டி வாங்கித்தருகிறோம், பிடித்த செல்போன் வாங்கி தருகிறோம். இப்படி எல்லாம் பிடித்ததை கொடுத்த பெற்றோர்கள் அவர்கள் வாழ்க்கைக்கு என் பிடித்த ஒரு பெண்ணை கொடுக்க கூடாது, அப்படி கொடுத்தால் அவர்கள் வாழ்கை நன்றாக இருக்கும். அதனால் என் மகனின் ஆசைக்கு இணங்க இஸலாமியர் தோழரின் மகளை நான் திருமணம் செய்து வைத்தேன் என்று கூறினார். சிம்புவின் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு கண்கலங்கி அழுதார்.
சிம்பு மிக அருமையான பிள்ளை. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எப்போதும் இருக்கும். ஆனால் அவர் மீது வீண் பழிகள் வருகிறது. அதனை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது .அவரது திருமணம் முடிவு பற்றி கேட்டால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு என் மீது வருத்தம் , இறைவன் மீது வருத்தம் என்று கண்கலங்கி உள்ளார் ராஜேந்தர்.சிங்கம் போன்ற மனிதர் அழுதவுடன் அங்கு உள்ளவர்கள் கண் கண்கலங்கியது.