டி ராஜேந்தர் ஒரு நேரத்தில் இவர் எடுத்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்கள். இவருடைய படங்களை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் தியேட்டர்களில் அலைமோதும். அருமையான திரைக்கதைகளை எடுத்த மனிதர் இன்றும் மக்கள் மனதில் இவருடைய படங்களுக்கு இடம் உண்டு.
ஒரு படத்தை இயக்குகிறார் என்றால் அந்த படத்தில் அவர் ஹீரோவாக நடித்து பாடல்கள் பாடி இசை அமைத்து அந்த படத்திற்கு தேவையான காட்சிக்கு செட் அமைத்து படத்தை ரிலீஸ் செய்து வெற்றியும் பார்த்தவர்.
திரையுலக வட்டாரத்தில் டி.ஆர். ஒரு நல்ல மனிதர். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் ஒரு குணம் கொண்டவர். எளிமையாக பழகக்கூடியவர் என்றெல்லாம் கூறுவார்கள். அவர் வசித்து வரும் ஏரியாவில் அவரைப் பற்றி கேட்டால் நல்ல மனிதர் திடீரென்று ஆட்டோவில் செல்வார். அனைவரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருப்பார். அவருடைய வருத்தமே அவருடைய மகன் சிம்புவின் தற்போதைய நிலை குறித்து மட்டும் தான் என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில் 22 -11 – 2020 அன்று டி ஆர் அவர்கள் தலைவர் இடத்திற்கு தமிழ் தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார். துணைத்தலைவர் இடத்திற்கு தளபதி விஜயின் முன்னாள் பிஆர்ஓ பிடி செல்வகுமார் போட்டியிடுகிறார். செயலாளர் இடத்திற்கு இயக்குனர் லிங்குசாமி அவர்களின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு போட்டியிடும் TR அவர்களுக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.