Sunday, May 19, 2024
-- Advertisement--

உயர் அதிகாரிகளுக்கு இனிமேல் சல்யூட் தேவையில்லை..!! ரூபா ஐபிஎஸ் அதிரடி..!!

பொதுவாக உயர் அதிகாரிகளை பார்க்கும் பொழுது அதன் கீழ் உள்ள அதிகாரிகள் சல்யூட் அடிப்பது வழக்கம். இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஐபிஎஸ் அதிகாரியும் மாநில உள்துறை செயலாளராக இருக்கும் ரூபா தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே ஒரு நல்லதொரு வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்பொழுது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் போக்குவரத்து காவலர்கள் சாலையில் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது உயர் போலீஸ் அதிகாரிகள் வாகனத்தில் செல்லும்போது அவர்களுக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்

மேலும் மாநில டிஜிபி ரவி காந்தி கவுடாவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்பியே இதை நான் கூறியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். போக்குவரத்து காவலர்கள் சலூட் அடிக்காமல் கடமையை சரியாக செய்தாலே போதுமானது. இதன்மூலம் போக்குவரத்து காவலர்கள் தங்கள் உயிரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் வாகன ஓட்டிகளும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சசிகலா டிஜிபிக்கு ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஆதாரபூர்வமாக கூறினார். சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றதாக கூறியவரும் இவர்தான். பின்னர் போக்குவரத்து டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles