புஷ்பா படத்தில் மகேஷ்பாபு, சமந்தா உள்ளிட்ட ஐந்து நடிகர், நடிகைகள் நடிக்க மறுத்த தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஸ்பா படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. இந்த படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். அவர் முதலில் மகேஷ் பாபுவிடம் தான் இந்த படத்தின் கதையைக் கூறியிருக்கிறார்.
நெகடிவ் கலந்த ரவுடி கேரக்டர் என்பதால் இதில் நடிகர் மகேஷ்பாபு மறுத்துவிட்டார். அதன் பிறகே அல்லு அர்ஜுன் இதில் நடித்தார். இதேபோல் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் சமந்தாவை கேட்டிருக்கிறார்கள்.
சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன்பின்பே ராஷ்மிகா தேர்வானார். ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பாலிவுட் நடிகைகள் திஷா பதானி மற்றும் நூரா பாதேஹி ஆகியோரை அடுத்தடுத்து கேட்டு இருவரும் அதிக சம்பளம் கேட்டதால் அவர்களை நிராகரித்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பாடலில் சமந்தா நடித்தார். அதேபோல் பகத் பாசில் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசினார்கள். கால்ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியவில்லை.