டாக்டர் சேதுராமன் நகைச்சுவை நடிகர் சந்தானம் அவர்களின் நெருங்கிய நண்பர் தனது நண்பர் ஹீரோவாக அறிமுகப்படுத்த ஆசைப்பட்ட சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
முதல் படமே அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெரிய ஹிட் படமாக சேதுராமனுக்கு அமைந்தது. சேதுராமன் MBBS மற்றும் MD படித்த மருத்துவராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். ZI கிளினிக் என்ற ஒரு கிளினிக் ஆரம்பித்து அதனை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு பல விழிப்புணர்வு விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டு மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.
35 வயதான சேதுராமன் அவர்கள் 26 மார்ச் 2020 மாலை 8 .45 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலமாக சொல்லி வந்த டாக்டர் சேதுராமன் அவர்கள் இளம் வயதிலேயே அதுவும் 35 வயதிலேயே இறந்தது பெரிய அதிர்ச்சியை அளித்தது. தனது நண்பனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தானம் சேதுராமன் அவர்களின் இறுதி சடங்குகள் வரை இருந்து அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்தார்.
தற்பொழுது சேதுராமன் அவர்களுக்கு சஹானா என்ற பெண்குழந்தையும் வேதாந்த் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். தற்பொழுது சேதுராமனின் கனவை நிறைவேற்றுவதற்காக அவர் ஆரம்பித்த ZI கிளினிக்கை நடத்தி வருகிறார் அவரது மனைவி உமா சேதுராமன் அவர்கள்.
இன்று சேதுராமன் அவர்களின் திருமண நாள் என்பதினால் அவருடைய மனைவி உமா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதே நாளில் 12 Feb 2016 அன்று தான் நான் இந்த அழகான குடும்பத்தில் மருமகளாக அடியெடுத்து வைத்தேன் ஆறு வருடங்கள் ஓடி விட்டன கடவுளின் திட்டத்தை நம்பமுடியவில்லை.
ஒவ்வொரு ஆண்டு விழாவின் போது நான் டாக்டர் சேதுவிற்கு பரிசளிப்பது வழக்கம் கடந்த வருடத்தில் எங்கள் பயணத்தில் படங்கள் போன்ற நினைவுகளை ஒரு மாதத்திற்கு முன்பே தயார் செய்து என் முழு முயற்சியும் மேற்கொள்வேன். நான் ஆச்சரியங்களை கொடுக்க விரும்புகிறேன் பிறந்தநாள் மற்றும் ஆண்டு விழாக்களை கொண்டாடுவது அங்கீகரிக்கவோ விரும்புவதில்லை அவருக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பான நாள் அவர் தனது பிறந்தநாளை போல் ஒவ்வொரு நாளையும் கொண்டாட விரும்புபவர்.
மிஸ் யூ டாக்டர் செய்து இன்று நீங்கள் எங்களுடன் இல்லை ஆனால் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருக்கும் எங்கள் பெற்றோருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
எனது மாமியார் எனது ஆதரவின் பெரிய தூண் என் மாமனார் மிகவும் ஊக்கமளிக்கும் ஆளுமை எனது சொந்த உடன் பிறப்புகள் மற்றும் எனக்கு நண்பர்கள் போன்று எனது சகோதரி மற்றும் மைத்துனர் காரணமாக நான் இன்னும் இங்கே வலுவாக நிற்கிறேன் ஒரு நல்ல குடும்பம் வேண்டும் என்று நான் கடவுளிடம் கேட்டிருக்க முடியாது ஒவ்வொன்றிலும் உங்களை டாக்டர் சேதுவை பார்க்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.