மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் அசோக் இவருக்கு வயது 32 இவர் சுத்த என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுதாவிற்கு வயது 27 . தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
குடி பழக்கம்
அசோக்கும் சுதாவும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. அசோக் அடிக்கடி வீட்டிற்கு குடித்து கொண்டு வந்து இருக்கிறார். குடி பழக்கத்தை நிறுத்துமாறு சுதாவிற்கும் அசோக்கிற்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
TIKTOK மோகம்
டிக்டாக் செய்து லைக்ஸ் மற்றும் பிரபலமாக நினைக்கும் ஒரு சில பெண்களை போல அசோக்கின் மனைவியும் டிக்டாக்கில் எதாவது வீடியோ செய்து கொண்டே இருப்பார். அது மட்டும் அல்லாமல் டிக்டாக் மூலம் அவர்க்கு நிறைய ஆண் நண்பர் பழக்கம் இருந்து இருக்கிறது. அசோக் அவரை நிறைய முறை கண்டித்தும் டிக்டாக்கை விடுவது போல இல்லை சுதா. திடீர் என்று ஒரு நாள் சுதா வேலை விஷயமாக வெளியூர் சென்று உள்ளார் அசோக்கிடம் சொல்லாமலே. இதனால் அசோக் – சுதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நடந்துள்ளது.
பிணமாக கிடந்தார் சுதா
இந்நிலையில் அசோக் தனது பிள்ளைகளை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுதா குழந்தைகள் எங்கே என்று கேட்க அவரது கழுத்தை நெருக்கி கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டார் அசோக்.
தலைமறைவான சுதாவின் கணவர் அசோக்
இந்த தகவல் காவல்துறைனர்க்கு அக்கம் பக்கத்தினர் தெரிவித்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுதா கழுத்தை நெரித்து கொள்ளப்பட்டது உறுதி செய்தனர். கொலை செய்து தப்பி ஓடிய அவரது கணவர் அசோக்கை பிடிக்க விசாரணையில் இறங்கினார்கள் காவல்துறையினர்.
குடிப்பழக்கத்தை விட பெரிய விஷமாக இருக்கிறது இந்த TIKTOK மோகம்.