மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கணவர் புருஷோத்தமன் உடன் இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
கற்கோயில் கிராமத்தை கடந்த போது எதிரே தாறுமாறாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் மீது மோதிவிட்டு அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் நடந்து சென்று தையல்நாயகி ராணி ஆகியோர் மீது மோதி தூக்கி வீசியது.
கார் தூக்கி வீசியதில் தையல் நாயகியும் உயிர் இறந்த நிலையில் ராணி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். காரை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் இறங்கி தப்பி ஓடிய நிலையில் ஆவேசமடைந்த பொதுமக்கள் காரை அடித்து நொறுக்கி அருகிலிருந்த குளத்தில் தள்ளினர். தகவலறிந்து வந்த போலீசார் ஜேசிபி இயந்திரம் கொண்டு குளத்திலிருந்து காரை எடுத்தனர்.
குடிபோதையில் விபத்து ஏற்படுத்தியவர் வைத்திய நாதபுரத்தை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் அருண்குமார் என்பது தெரியாத நிலையில் அவனை கைது செய்யக்கோரி ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தப்பி ஓடி அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.