Tuesday, May 7, 2024
-- Advertisement--

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 65 வயது நபருக்கு நேர்ந்த சோகம்…!!!

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 65 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா, சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான மேகனா அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரு வருடத்திலேயே மேகனாவில் கணவர் வீட்டை விட்டு ஓடி விட்டார்.

அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். மேகனா இரண்டாவதாக சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்த பேரன் பேத்தி எடுத்த 65 வயதான சங்கரண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 65 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்த பின்பு சங்கரண்ணா தனது மனைவியுடன் ஆட்டம் பாட்டம் காதலென மகிழ்ச்சியாக இருந்தனர். பின்பு சங்கரண்ணா வாழ்க்கையில் பிரச்சனை வர தொடங்கியது. மனைவிக்கும் தாய்க்கும் இடையே சண்டை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை அவரது தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் அவரது மனைவி கூறுகையில் நானும் எனது கணவரும் நன்றாக இருந்தோம். எனது மாமியார் 15 நாட்களுக்கு ஒருமுறை என்னிடம் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்.

அடிக்கடி என்னை வெளியில் போவதாக குற்றம் சாட்டினார். மேலும் எனது கணவரை மாமியார் செத்துப் போ என திட்டினார். இதனால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை காலையில் தான் விஷயம் தெரிய வந்தது. நான் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த சங்கர் அப்பா தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles