Monday, May 20, 2024
-- Advertisement--

கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் தீடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்…!!! வெளியான தகவல் இதோ.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ராஜ்குமார். அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேருமே திரை உலகில் இருந்து வருகின்றனர். அதில் இரண்டாவது மகன் சிவராஜ்குமார் மற்றும் கடைசி மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவருமே திரை உலகில் மாபெரும் நடிகர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். புனித் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் உடனே மருத்துவமனைக்கு செல்லவில்லை சற்று வலி அதிகரித்த நிலையில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் மதியம் 11.30 மணியளவில் விக்ரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அப்போது அவரின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் மருத்துவர்கள் இசிஜி போன்ற சோதனைகளை மேற்கொண்டனர். அதில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலும் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வெளியே புனித் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.

அங்கு மருத்துவமனை அருகில் இரண்டு பள்ளிக்கூடங்கள் இருப்பதால் அவசரஅவசரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு பெங்களூரு பல பகுதிகளிலும் மைசூரு உள்ளிட்ட பிற நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே மருத்துவமனையில் இருந்து 2.30 மணி அளவில் புனித் ராஜ்குமார் காலமானார் செய்தி அறிவிக்கப்பட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles