தமிழில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை கொண்ட நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆகும். இந்த நிகழ்ச்சியின் தனி ஸ்பெஷலே உலக நாயகன் கமல் தொகுத்து வழங்குவது தான். இந்நிலையில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 ல் , இலங்கையில் பிரபல சேனலில் பணிபுரிந்த ஜனனி பங்கேற்றுக்கொண்டார்.
ஆரம்பத்தில் இவருக்கென தனி ஆர்மி ஒன்றே தொடங்கப்பட்டது. இவர் செய்யும் சிறு சிறு கியூட்டான விஷயங்களும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டன. ஆனால் போகப் போக இவர் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதத்தினால் ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார்.
இந்த வாரம் நாமினேஷனில் ஜனனியுடன் சேர்த்து விக்ரம், அசிம் , ரட்சிதா, ஏடிகே, மணிகண்டன் போன்றோர் இருந்தனர் . ரசிகர்களிடையே குறைந்த வாக்கை பெற்ற ஏடிகே தான் இந்த வாரம் வெளியேறுவார் என நினைத்து கொண்டிருக்க, கடந்த வார டாஸ்கில் ஜனனி விதி மீறியதால் இந்த சீசனில் இருந்து ஜனனி இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி அடுத்து தனது பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிக்பாஸில் கலந்து கொண்டதற்காக ஜனனிக்கு ஒரு நாளைக்கு 26 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்ந்துது.