கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை பேசஞ்சர் ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது துடியலூர் கடந்து சென்ற போது ஒரு வாலிபர் ரயில் பாதையில் நடுவே வந்து நின்றார். அதைப் பார்த்த ரயில் எஞ்சின் டிரைவர் ஹாரன் அடித்தார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் நபர் ரயில் தண்டவாளத்தில் கால் நீட்டி படுத்துக் கொண்டார்.
அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரயிலில் பிரேக் பிடித்தார். ஆனால் ரயில் அந்த நபரை கடந்து சிறிது தூரம் சென்றதும் நின்றது. இதைத்தொடர்ந்து ரயில் எஞ்சின் டிரைவர் மற்றும் பயணிகள் கீழே இறங்கி சென்று பார்த்தபோது இந்த நபர் கால்நீட்டி ரயில் பாதையில் நடுவில் படுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது அவரை பத்திரமாக வெளியே மீட்டனர்.
தண்டவாளத்தில் படுத்துக் கொண்டதால் இது எந்த காயமும் ஏற்படவில்லை. அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மதுபோதையில் இருந்தா நபர் தற்கொலை முடிவில் வந்திருப்பதாக தெரிகிறது இதைத்தொடர்ந்து ரயில் புறப்பட்டு சென்றது.