நங்கநல்லூர் 35 வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரங்காச்சாரி 75. அவர் கடந்த 9ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி கவுசல்யா 70 .இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்த அதில் எனது கணவன் மறைவுக்குப்பின் தவிர யாரும் இல்லை என் கணவருக்கு ஈம சடங்கு செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.
எனது மகன் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எங்களுக்கு உதவுங்கள் என கூறியிருந்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடர்பு கொண்டு கௌசல்யாவுக்கு உதவிடுமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நங்கநல்லூரில் உள்ள கௌசல்யா வீட்டிற்கு நேரில் சென்று கணவர் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது கௌசல்யா தங்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் மகனுக்கு வேலை வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். தேவையான உதவி செய்வதாக அமைச்சர் உறுதி கூறினார். பின்னர் நிவாரணமாக 10,000 வழங்கினார். அப்போது ஆலத்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், வட்ட திமுக செயலாளர்கள் ஏசுதாஸ், ஜே.நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.