தற்பொழுது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்பொழுது கோபி- பாக்கியலட்சுமி விவாகரத்தை தொடர்ந்து கோபி பாக்கியலட்சுமி வீட்டிற்கு எதிராகவே ராதிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இதில் பாக்யாவுக்கும் கோபிக்கும் இடையில் பிரச்சினை வரவே வீட்டை விற்க போவதாக கோபி கூறியுள்ளார். வீட்டை எவ்வாறு மீட்பது என்று குடும்பமே போராட , எழில் அதற்கு ஒரு மாதத்தில் இந்த வீட்டை போராடித் மீட்டு தருகிறேன் என்று உறுதிமொழி அளிக்கிறார்.
அதற்காக எழில் எடுத்த அத்தனை முடிவும் தோற்றுப் போக, கடைசியில் பணம் நான் தருகிறேன் என் மகளை கட்டிக்கொள் என்று வர்ஷா அப்பா கூற வேறு வழி இல்லாமல் தான் காதலித்து வந்த அமிர்தாவை விட்டுவிட்டு வர்ஷாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறார் எழில்.
ஆனால் இறுதியில் எழிலுக்கும் அமிர்தாவிற்க்கும் திருமணம் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த திருமணத்தை கோபி தான் நடத்தி வைப்பார் என அனைவரும் நினைத்திருக்க, தொடர்ந்து பாக்யாவுக்கு பல விஷயங்களில் உதவி செய்து வரும் நடிகர் ஜீவா இந்த திருமணத்தை நடத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் உலா வரவே கண்டிப்பாக இதற்கு நடிகர் ஜீவா தான் பணம் தருவார் கல்யாணம் இவ்வாறு தான் நடக்கும் என இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.