Thursday, May 2, 2024
-- Advertisement--

குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் இல்லையென்றால்…!!! போராட்டம் வெடிக்கும் என அதிமுக எச்சரிக்கை.

குடும்பத் தலைவியருக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக மாவட்ட செயலர் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு உடனடியாக கால அட்டவணையை வெளியிட வேண்டும். பெண்கள் நலம் சார்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் விரைவாக செயல்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின்போது இறந்த காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும். குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.

இல்லையெனில் மக்கள் ஆதரவோடு தாய்மார்கள் பங்கேற்போடு போராட்டம் நடத்துவோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனோடு வரும் அக்டோபரில் அதிமுக 50வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எனவே பொன்விழா ஆண்டை தமிழகம் மட்டுமின்றி கட்சி செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் மிக விமர்சையாக மக்கள் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடுவது என கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles