சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்திலுள்ள ஆம்தாலா கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரின் மகள் சுரேகா வயது 7 . சுரேகா சில மாதங்களாகவே உடல்நிலை சரி இல்லாமல் அதிக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சுரேகாவை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையில் கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சை தொடர்புகொண்டு சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.
ஆனால் வேறு ஒரு சடலம் விரைவில் வர உள்ளதாக கூறி அவர்களை காத்திருக்க சொன்னார்கள். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஈஸ்வர் தாஸ் தனது மகளை தோளில் சுமந்தவாறு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இவர் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ இச்சம்பவத்தை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதோடு இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Surguja: Chhattisgarh Health Min TS Singh Deo orders probe after video of a man carrying body of his daughter on his shoulders went viral
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 26, 2022
Concerned health official from Lakhanpur should have made the father understand to wait for hearse instead of letting him go, Deo said(25.3) pic.twitter.com/aN5li1PsCm