நடிகை சுதா சந்திரன் சிறந்த பரதநாட்டிய கலைஞர் தமிழ் மட்டுமின்றி பல இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். நடன நிகழ்ச்சியின் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். சுதாசந்திரன் ஒரு விபத்தில் கால் ஒன்றை இழந்த அவர் செயற்கை கால் மூலம் தொடர்ந்த நடனமாடினார். அதன் பின்னர் தான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நடிக்கும்போது நடனமாடும் போதும் அவர் சேர்க்கை காலால் நடனமாடுகிறார் என்பதே தெரியாது.
தமிழிலும் மயூரி என்ற படம் மூலம் அறிமுகமானார். அதில் கால் இழந்த ஒரு நடன கலைஞராக வருவார். நடிகை சுதா சந்திரன் இன்ஸ்டாகிராமில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் அவமானப்படுத்த படுவதை தவிர்க்கலாம் என்று நடிகை கூறியுள்ளார்.
செயற்கை முறை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வலிக்கிறது என்று கூறி கிரில்ஸ் பாதுகாப்பு மூலம் தனது துன்பத்தை பகிர்ந்து உள்ளார். அவர் அந்த வீடியோவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள் நான் சுதா சந்திரன் ஒரு நடிகை மற்றும் நடன கலைஞர் நான் ஒரு செயற்கை மூட்டு உடன் நடனமாடி வரலாற்றை உருவாக்கி என் நாட்டை பெருமை படுத்தினேன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது தொழில் முறை பயணம் செய்யும்போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறது என் செயற்கை மூட்டு கொழுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? நம் நாடு இதைப் பற்றி பேசுகிறதா நம் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா?
இது மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள் என வீடியோவில் கூறியிருந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் அந்த கிரில் வழியாக செல்லும் போது மிகவும் வலிக்கிறது எனது செய்தி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன் உடனடி நடவடிக்கை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.