Friday, May 3, 2024
-- Advertisement--

நீட் தேர்வுக்கு வழி தெரியாமல் தவித்த மாணவனை காரில் அழைத்து சென்று தேர்வு எழுத வைத்த மாவட்ட ஆட்சியர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு ஏலகிரி மலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர் வழி தெரியாமல் பொன்னேரி கூட்ரோட்டில் நின்றிருந்தார்.

அவ்வழியாக ஆய்வுக்கு சென்ற திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா விசாரித்தபோது வழி தெரியாமல் வேலூர் வரை சுற்றிவிட்டு வந்துள்ளேன் நேரமாகிவிட்டது என்று தெரிவித்தார்.

கலெக்டர் தனது காரில் மாணவனை ஏற்றி ஏலகிரி மலையில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று தேர்வு எழுத வைத்தார். அவருக்கு வேடியப்பன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles