திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு ஏலகிரி மலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த வேடியப்பன் என்ற மாணவர் வழி தெரியாமல் பொன்னேரி கூட்ரோட்டில் நின்றிருந்தார்.
அவ்வழியாக ஆய்வுக்கு சென்ற திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா விசாரித்தபோது வழி தெரியாமல் வேலூர் வரை சுற்றிவிட்டு வந்துள்ளேன் நேரமாகிவிட்டது என்று தெரிவித்தார்.
கலெக்டர் தனது காரில் மாணவனை ஏற்றி ஏலகிரி மலையில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று தேர்வு எழுத வைத்தார். அவருக்கு வேடியப்பன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கிராமத்தில் இருந்து ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வந்த மாணவன் பகுதிக்கு செல்ல முடியாமல் இருந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உடனடியாக தக்க சமயத்தில் அவரை அழைத்து தனது காரில் ஏற்றிச் சென்று pic.twitter.com/0IqAHyVF4D
— Our Ambur 360* (@ourambur_offl) September 12, 2021