Saturday, April 27, 2024
-- Advertisement--

ஓய்வு பெற்ற டபேதாரை தனது காரின் முன்சீட்டில் அமரவைத்து அழகு பார்த்த கலெக்டர்…!!! புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்.

புதுக்கோட்டையில் ஓய்வு பெற்ற டபேதாரை கௌரவிக்கும் வகையில் தனது காரில் முன் சீட்டில் அமர வைத்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார் கலெக்டர் கவிதா ராமு. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. புதுக்கோட்டை டவுன் அடப்பன் வயல் ஒன்றாம் வீதியில் வசிப்பவர் அன்பழகன்.

இவரது மனைவி சித்ரா இவர்களுக்கு கோவிந்தராஜ் என்ற மகனும் கமலா என்ற மகளும் உள்ளனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்கள் உமாமகேஸ்வரி மற்றும் தற்போது பணியாற்றி வரும் கவிதா ராமு உள்ளிட்டோரிடம் அன்பழகன் டபேதராக பணியாற்றி வந்தார்.

36 வருடங்களாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அன்பழகன் கடந்த 28ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அன்று அன்பழகனுக்கு பிரிவு உபசார விழா மிக விமர்சையாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அன்பழகன் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் என திரளாக பங்கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு சென்ற அன்பழகன் அங்கு கலெக்டர் கவிதா ராமுவிடம் வாழ்த்து பெற்றார். அன்பழகனுக்கு பரிசுகள் வழங்கி அவரை கலெக்டர் கௌரவப்படுத்தினார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு புறப்பட தயாரான போது கலெக்டர் அன்பழகனை அழைத்து தனது காரில் முன் சீட்டில் தான் அமர்ந்து செல்லும் இருக்கையில் அமர வைத்து வழி அனுப்பி வைத்தார்.

கார் புறப்படுவதற்கு முன் அன்பழகன் கண்ணீர் வருக கலெக்டருக்கு நன்றி தெரிவித்து சென்றார். தற்போது அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles