தளபதி விஜய் நடித்து வெளியாக இருக்கும் படம் தான் மாஸ்டர். மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு கல்லூரியின் பேராசிரியராக நடித்துள்ளார். மாஸ்டர் படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீசாகப் போகும் நேரத்தில் கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது.
தற்பொழுது மாஸ்டர் படம் வருகின்ற பொங்கல் விருந்தாக 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர் படக்குழுவினர். தற்பொழுது திரையரங்குகள் 50% இயற்கையுடன் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதினால் நிறைய படங்கள் சூட்டிங் முடிந்ததும் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றியை காணவில்லை அது மட்டுமல்லாமல் வசூலும் சொல்லும் அளவிற்கு இல்லை அதனால் ஏற்கனவே நொந்து போய் உள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள். மக்களை திரும்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டும் என்றால் மாஸ்டர் வர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையாக இருந்தது. தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவருடைய படங்கள் ரிலீஸ் என்றால் குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து மகிழ்வார்கள்.
விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் ஆனால் மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் கூடும் ஒரு நல்ல வசூல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வருகின்ற பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் தளபதி விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் என்று செய்திகள் சில நாட்களாக சமூக வலைதளத்தில் வந்துகொண்டிருக்கிறது அதில் மாஸ்டர் படத்திற்காக முதல்வரை சந்தித்தார் என்று செய்திகள் வெளியானது.
தற்பொழுது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விஜய் சந்தித்தது உண்மைதான் ஆனால் அவர் மாஸ்டர் படம் தொடர்பாக மட்டும் அவர் சந்திக்கவில்லை. மாஸ்டர் படம் மட்டுமல்ல அனைத்து படங்களுமே இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது பலகோடி ரூபாய் செலவு செய்து படம் தயாரித்து வைத்திருக்கிறார்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள் அதை நீங்கள் பார்த்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று விஜய் கூறியுள்ளார் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார்.