அட்லி பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் துணை இயக்குனராக இருந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தன்னை வெளி உலகிற்கு இயக்குனராக அடையாளப்படுத்திக் கொண்டார்.
ராஜாராணிக்குப்பிறகு தளபதி விஜயின் தெறி திரைப்படத்தை இயக்கினார். தெறி திரைப்படம் விஜய்க்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அட்லிக்கும் விஜய்க்கும் நண்பன் படப்பிடிப்புத் தளத்தில் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் கூட அண்ணா அண்ணா என்று அழைப்பார் அட்லி.
அட்லியின் அன்புக்காகவே தெறி படத்தில் நடித்தார் விஜய் அந்த படத்திற்கு பிறகு மீண்டும் மெர்சல் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததால் அட்லி விஜய் கூட்டணி வெற்றி கூட்டணியாக சினிமாவில் கருதப்பட்டது அதன் பின்பு மூன்றாவது முறையாக பிகில் திரைப்படத்தில் அட்லி உடன் இணைந்தார் விஜய் அந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சக்கை போடு போட்டது.
அடிக்கடி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் விஜய் பற்றி அட்லி பேசும்போது என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன் அவரு என்னுடைய அண்ணன் என்னுடைய தளபதி என்று விஜய்யை புகழ்ந்து தள்ளுவார். அட்லீக்கு விஜய் மீது அதிக பாசமும் மரியாதையும் உண்டு.
அட்லி ப்ரியா தம்பதியினருக்கு 9 நவம்பர் 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எட்டு வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் சூட்டிங் வேலைகளில் படு பிசியாக இருந்த அட்லி. தற்பொழுது குட் நியூஸ் சொல்லி உள்ளார்.
அட்லியின் மனைவி பிரியா கர்ப்பமாக இருக்கிறார் அவருடைய வளைகாப்பு விழா இன்று நடந்தது.
பிரபலங்கள் அனைவரும் அட்லீ வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்கள் குறிப்பாக தளபதி விஜய் வித்யாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுத்து மேடையில் ஏறி அட்லீயிடம் கை கொடுத்துவிட்டு பேசிய வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.