Monday, May 6, 2024
-- Advertisement--

விஜயின் அரசியல் வருகை பற்றி ஆலோசனை கூட்டம் இன்று நடந்ததா..? உண்மை இது தான்.

தளபதி விஜய் இவருக்கு இளைஞர்கள் பலம் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவருடைய படங்கள் வந்தால் பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து மேளங்கள் கொட்டி நிறைய நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி மகிழ்வார்கள் அவரது ரசிகர்கள்.

பால் அபிஷேகம் வேண்டாம் அதற்கு பதில் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று விஜய் கூறியிருந்தார். சென்னையில் ஒரு கட்சி சார்ந்தவர் பெயரில் கட்டவுட் வைக்கப்பட்டு அது ஒரு இளம்பெண்ணின் மீது விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அறிந்த விஜய் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் தயவுசெய்து கட்டவுட் வைக்காதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள் கட்அவுட் வைப்பதை தவிர்த்தனர். தான் சொல்வதை கேட்கும் ஒரு இளைஞர்கள் கூட்டத்தை கையில் வைத்திருக்கும் விஜய் எப்போது அரசியலில் இறங்குவார் என்ற கேள்வி அடிக்கடி அனைவராலும் கேட்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கட்சி ஆரம்பித்து அதற்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்து வந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

நடிகர் சத்யராஜ் MGR அவர்களின் தீவிர ரசிகர். அவர் ஒரு பேட்டியில் MGR அவர்களுக்கு பிறகு விஜயை தான் எனக்கு பிடிக்கும். ஆணவம் இல்லாத ஒரு அழகு விஜய் கிட்ட இருக்குனு சொல்லி இருப்பார். ஒரு அன்பான சிரிப்பு எங்க வீட்டு பிள்ளை போன்ற முகம் புரட்சி தலைவர் MGR அவர்களுக்கு பிறகு விஜயிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். பிரபலங்கள் அனைவரும் விஜயின் அரசியல் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். அரசியல் வருகை பற்றி விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்று நடிகர் விஜயை சந்திக்க பனையூர் இல்லத்திற்கு வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய் வராததால் ஏமாற்றம் அடைந்து திரும்ப சென்றனர் என்று செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் யாரும் மற்ற கட்சிகளில் இணைய வேண்டாம் சீக்கிரம் கட்சி பற்றி முடிவு எடுக்கிறேன் என்று விஜய் கூறியதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தது.

இது அத்தனையும் பொய் இன்று பனையூர் பண்ணைக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்றது உண்மை தான் ஆனால் விஜயை சந்திப்பதற்காக அல்ல மாவட்டங்கள் வாரியாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் செய்யும் நற்பணி பற்றி தெரிவிப்பதற்காக அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை சந்தித்துள்ளனர் ஆனால் விஜய் அரசியல் நிமித்தமாக தான் இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார் என்று வரும் செய்தி துளியளவும் உண்மை இல்லை.

தளபதி விஜய் தற்பொழுது மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles