தளபதி விஜய் இன்றைய காலகட்டத்தில் இவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் உள்ள நடிகர். ரஜினிக்கு பிறகு குடும்பங்களை தியேட்டருக்கு கொண்டுவரும் மேஜிக் தெரிந்த ஒரே நடிகர் விஜய். அதுபோல ரஜினி படங்களின் பிசினஸ் அடுத்து விஜய் படங்களின் பிசினஸ் தான் அதிகமாக தமிழ் சினிமாவில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு கேரளா மற்றும் வெளிநாடுகளில் விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் இருப்பதால் இன்று தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தில் தளபதியாக இருக்கிறார் விஜய்.
தளபதி விஜயின் பிகில் படத்தை தொடர்ந்து மாஸ்டர் படம் திரைக்கு வர இருக்கும் நேரத்தில் கொரோனா பரவலால் தற்போது படத்தின் ரிலீசை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பல படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் OTT ரிலீஸ் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. விநாயகர் சதுர்த்தி அன்று தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற அப்டேட் வரும் என்று காத்திருக்கையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் வெளிவராது அமேசான் விரைவில் ரிலீசாக உள்ளது என்ற அறிவிப்பு வந்தது. இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் இப்படி ரிலீஸாவது வருத்தம் அளிக்கிறது என்று கூறிவந்த நிலையில் விஜய் ரசிகர்கள் சற்றும் பயப்பட ஆரம்பித்தார்கள்.
தன் தளபதியின் மாஸ்டர் திரைப்படம் இதுபோன்று OTTயில் ரிலீஸ் ஆகி விடுமோ என்று பயப்படத் தொடங்கினர். தற்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் தகவல் படி மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் மட்டும் தான் வெளிவரும். இந்த முடிவில் அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விஜய் பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
தற்பொழுது டோக்கியோ தமிழ் சங்கம் லைவ்வில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் கலந்து கொண்டார். ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் கலந்துகொண்டு கொள்கிறார்கள் என்று தெரிந்த உடன் விஜய் ரசிகர்கள் அனைவரும் படையெடுக்க தொடங்கினர். அப்போது தளபதி 65 பற்றி வாய் திறப்பாரா என்று ஆவலுடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் முருகதாஸ் அவர்களிடம் இளைய தளபதியை வைத்து அடுத்த படம் பண்ண போறீங்களா என்று கேட்டதற்கு அவர் இளைய தளபதி இல்லை அதை தாண்டி தற்போது தளபதி என்ற கட்டத்திற்கு வந்துவிட்டார். அதனைப் பற்றிய அறிவிப்பை நான் வெளியில் கூற முடியாது. அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும் என்று மறைமுகமாக கூறினார். அப்போது தளபதி விஜயை வைத்து படம் இயக்க போவது உறுதி என்று கேட்க சிரித்துக்கொண்டே ஆம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஹாட்ரிக் கொடுத்த முருகதாஸ் விஜய் கூட்டணி அடுத்த படத்தில் எப்படிப்பட்ட கதையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த நிலையைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சந்தோசத்தில் மிதந்து வருகின்றனர். முருகதாஸ் விஜய்யை வைத்து கண்டிப்பாக தரமான படத்தைக் கொடுப்பார் என்பதே விஜய் ரசிகர்களின் பெரிய நம்பிக்கை.