தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் தளபதி விஜய் தான். ஒரு நடிகர் நடித்து திரைப்படம் வெளியாகி தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேன்டீன் வரை லாபம் பார்க்கலாம் என்றால் அது விஜய் படம் வெளிவந்தால் மட்டுமே நடக்கும்.
தற்பொழுது ரஜினி படத்தின் வசூலை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து விட்டார் விஜய். சமீபத்தில் விஜயின் படங்கள் வசூலில் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளது. தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை மூன்று நாட்களிலேயே எடுத்து விடுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
எப்படி ஒரு நேரத்தில் ரஜினி குடும்ப ரசிகர்களை கையில் வைத்திருந்தாரோ அதுபோல விஜய் இளைஞர்கள் பட்டாளம் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் கூட்டத்தை கையில் வைத்துள்ளார். விஜயின் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
விஜய்யின் படங்களுக்கு தமிழ்நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறதோ அதே போல பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாடுகளிலும் விஜயின் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் திரையரங்கில் பெரிதாக ஓடாததால் நொந்து போன திரையரங்கு உரிமையாளர்கள் மறுபடி மக்கள் தியேட்டருக்கு வர வேண்டுமென்றால் மாஸ்டர் வந்தால் மட்டுமே முடியும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
விஜய்யும் தனது படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூல் பல சாதனைகளை புரிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் ஆந்திராவில் ஒரு தமிழ் படம் மாபெரும் வசூலை பெற்றது என்றால் அது மாஸ்டர் தான். தற்பொழுது விஜயின் மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம் படத்தை பார்த்த ஒரு சில முன்னணி நடிகர்கள்.
மாஸ்டர் படம் வெளியான 3 நாட்களில் 100 கோடியை நெருங்கியதாக தகவல் வெளியானது ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மாஸ்டர் படம் இந்த வாரத்தில் 200 கோடியை நெருங்குகிறது என்று கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
விஜய்யின் சமீபத்தில் வெளியான சர்க்கார், பிகில், மெர்சல் போன்ற படங்கள் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது அதனை தொடர்ந்து தற்பொழுது மாஸ்டர் திரைப்படம் 200 கோடியை தொடுகிறது.
கொரோனாவிற்கு பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று கவலையுடன் இருந்த திரையரங்கு உரிமையாளர்களின் முகத்தில் சந்தோஷம் தெரிகிறது. கொரோனவை மறந்து விஜயை கூட்டக்கூட்டமாக பார்த்து வருகின்றனர் மக்கள். மாஸ்டர் படத்தினால் நாங்கள் லாபம் அடைந்து விட்டோம் என்று பல தியேட்டர் உரிமையாளர்கள் விஜய்க்கு நேரில் சென்று வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இது தான் உண்மையான வெற்றி வாழ்த்துக்கள் விஜய்.