Wednesday, May 8, 2024
-- Advertisement--

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் களம் இறங்க கையசைத்த விஜய் தரப்பு ஆனால்..!!! திடீர் டெல்லி பறந்த விஜய்..!!! என்ன காரணம் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் பெரிய ரசிகர் படையை தன் கையில் வைத்திருப்பவர் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார் இவர் அரசியலுக்கு வரலாமே என்று சக நடிகர்கள் வற்புறுத்தியும் அன்போடு கேட்டுக் கொண்டும் அரசியல் பொருத்தவரை நிதானமாக இருக்கிறார் விஜய்.

அமைதியாக அரசியலை ஆழ்ந்து கவனித்து வருகிறார். தற்பொழுது விஜய்யின் மக்கள் இயக்கத்தில் உள்ள சிலர் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் தரப்பிடம் அனுமதி பெற்றுள்ளனர். இதில் விஜய்யின் மக்கள் இயக்கம் நேரடியாக சப்போர்ட் செய்யாவிட்டாலும் விஜய்யின் பெயரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க தந்தை எஸ்ஏசி அவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து உள்ளார் விஜய். விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக விஜய்க்கே தெரியாமல் மாற்ற நினைத்தால் தந்தை மீது கோபத்தில் உள்ள விஜய் தன் தந்தை தன் பெயரை வைத்து எந்த ஒரு அரசியலும் செய்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தந்தை SAC அப்பா மகன் உறவில் சில சண்டைகள் இருக்க தானே செய்யும் எனக்கும் என் மகனுக்கும் சில பிரச்சனைகள் இருக்கு என்று சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வலையில் இருப்பதாகும் விரைவில் அவரைப் பற்றி புரிந்து கொள்வார் என்றும் கூறியிருந்தார்.

SAC மூலமாக விஜய் மன்றத்தில் இணைந்த சிலரும் புஸ்ஸி ஆனந்த் அவர்களால் மன்றத்தில் இணைக்கப்பட்ட சிலருக்கும் மறைமுகமாக சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

விஜய் இன்று அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து பீஸ்ட் படக்குழுவினருடன் டெல்லி பறந்துள்ளார். டெல்லி ஏர்போர்ட்டில் விஜய் வந்து இறங்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரல் ஆகி வருகிறது. பீஸ்ட் நான்காம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க உள்ளதாகவும் அதற்காக தான் விஜய் டில்லி சென்று இருப்பதாகவும் வேறு எந்த ஒரு அரசியல் காரணம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர் விஜய் மன்றத்தினர்.

விஜய் பொருத்தவரை அரசியலை கூர்ந்து கவனித்து வருகிறார். விஜய் பெயரை வைத்து அரசியல் யாரும் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles