தளபதி விஜய் தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு மக்கள் ஏற்றுக்கொண்ட மாஸ் ஹீரோ. இவருடைய படங்களின் பிஸ்னஸ் ரஜினி படத்துக்கு நிகராக இருக்கிறது. வசூலிலும் விஜய் படம் முதல் மூன்று நாட்களிலேயே பல கோடிகளை தாண்டி விடுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். அதற்கு உதாரணம் தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாத போது கேரளாவில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு தமிழ்த் திரையுலகத்தை மட்டுமல்லாமல் மலையாளத் திரையுலகத்திற்கு ஆச்சரியப்பட வைத்தது.
மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வெளியாகும்போது எப்படி வரவேற்பு இருக்குமோ அந்த அளவிற்கு விஜய்யின் படங்கள் கேரளாவில் ரிலீசாகும்போது பெரிய வரவேற்பு இருக்கும். தற்பொழுது விஜய்யின் மார்க்கெட் வெளிநாடுகளிலும் உயர்ந்துள்ளதால் விஜயை வைத்து பல கோடி ரூபாய்களுக்கு படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கின்றனர்.
சமீபத்தில் கிடைத்த செய்தி என்னவென்றால் விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் டைரக்சன் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்று வந்தார். சஞ்சய்க்கு டைரக்சன் செய்வதில் அதிகம் ஆர்வமாம்.
தனது தந்தை விஜயை வைத்து விரைவில் ஒரு படத்தை டைரக்ஷன் செய்ய உள்ளாராம். இதுபற்றிய அறிவிப்பு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு பிறகு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.