தளபதி விஜய் தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்று சொல்லலாம். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இவருக்கு உள்ள ரசிகர் படை வேறு எந்த ஒரு நடிகருக்கும் இல்லை. கேரளாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்கள் வெளியாகும்போது எப்படி வரவேற்பு இருக்கும் போதும் அதை விட ஒரு மடங்கு பெரிதாக விஜய் படங்களுக்கு வரவேற்பு இருக்கும்.
மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் இவரது பிறந்த நாள் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஒரு சவால் விட்டு இருந்தார். அது என்ன சவால் என்றால் ஒரு செடி ஒன்றை நட்டு அதனை புகைப்படமாக வெளியிட வேண்டும் என்று ட்விட்டர் வழியாக விஜய்க்கு கோரிக்கை வைத்தார்.
இதனை அறிந்த விஜய் இன்று மாலை செடி ஒன்றினை தன் வீட்டில் நட்டு அதை புகைப்படம் எடுத்து இது உங்களுக்காக என்று மகேஷ் பாபுவிற்கு பதில் அளித்துள்ளார். இதனை ஏன் மகேஷ் பாபு விஜயை செய்ய சொன்னார் என்றால் விஜயின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்த ஒன்று. விஜய் இந்த செயலை செய்தால் அவர்களது ரசிகர்களும் இதனை பின் தொடர்வார்கள் என்ற நல்ல நோக்கத்தோடு கூறியிருக்கிறார். தற்பொழுது விஜயின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த போக்கிரி மற்றும் கில்லி படம் தமிழில் தளபதி விஜய்க்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது அனைவரும் அறிந்ததே.