தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெரிய இடத்தை கஷ்டப்பட்டு பிடித்து தனக்கென்று ஒரு பெரிய பிசினெஸ்ஸை கையில் வைத்திருப்பவர். தற்பொழுது அஜித் நடித்த வலிமை திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அஜித்தின் வலிமை திரைக்கு வந்தால் மீண்டும் திரையரங்குக்கு மக்கள் வருவார்கள் என்று நம்பியிருந்தார்கள் தியேட்டர் உரிமையாளர்கள் ஆனால் ஜனவரி மாதம் வெளிவர வேண்டிய திரைப்படம் தற்பொழுது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அவர்கள் ட்விட்டர் கணக்கு துவங்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் அஜித்தின் மனைவி நினைத்துக்கொண்டு வெல்கம் மேம் என்று பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளார்கள்.
இது பற்றி அஜித் தரப்புக்கு நெருக்கமான அவர்களிடம் கேட்டதற்கு அஜித் எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் இல்லை அதுபோன்று அவரது மனைவியும் சோசியல் மீடியாவில் இல்லை என்று உறுதியாக கூறி வருகிறார்கள்.
யாஷிகாவிடம் அந்த பதிவை உடனே நீக்குங்கள் அது அஜித்தின் மனைவி ஷாலினி இல்லை என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.