தல அஜித் தமிழ்நாட்டில் இவருடைய படங்கள் ரிலீஸ் என்றால் திருவிழா போல இருக்கும். இந்த மனிதர் பொது விஷயங்களில் தலையிடுவதில்லை அரசியலைப் பற்றி பேசுவதும் இல்லை ஆனால் மக்கள் இவர் மீது வைத்துள்ள அன்பு சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம்.
இவருடைய படங்கள் ரிலீஸ் ஆகும் நேரத்தில் தோரணம் கட்டி, ட்ரம்ஸ் அடித்து வெடி வெடித்து தியேட்டரை அலங்காரம் செய்து தலயை ஸ்கிரீனில் விசில் அடித்து வரவேற்கும் வெறித்தனமான ரசிகர்கள் இவருக்கு உண்டு. தமிழ்நாட்டில் பல இளைஞர்கள் இவரை ரோல் மாடலாக முன்வைத்துள்ளனர். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் அஜித்.
சமீபத்தில் பில்லா படத்தில் பணியாற்றிய ஒருவர் பேட்டி ஒன்றில் பேசிய போது அஜித் சார் ஜென்டில்மேன் சார் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்.
பில்லா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகள் கேட்கப்பட்டதாம் அஜித்திடம் . அப்பொழுது அஜித்திடம் ஒருவர் நயன்தாரா பிகினி உடையில் நடிப்பதைப் பார்த்து ரசித்தீர்களா என்று ஏடாகூடமாக கேள்வி ஒன்றே கேட்டுள்ளார்.
அதற்கு அஜித் நான் ஒரு நடிகன் அவர் ஒரு நடிகை இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை சிறப்பாக செய்வோம். என்று நறுக்கென்று பதிலளித்திருக்கிறார் அஜித்.