தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 250 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை குடிமகன்கள் சாதனை
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மார்க் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. டாஸ்மாக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் திறக்க மாட்டார்கள் என்று அறிந்துகொண்ட குடிமகன்கள் முதல் நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு மது அருந்துவோர் மதுபானங்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்று உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றுள்ளார்கள். மொத்த மது பானங்களையும் வாங்கி சென்றதால் சனிக்கிழமை ஒரே நாளில் 252 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 58 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
மதுரை பகுதியில் 49 கோடியும், திருச்சி பகுதியில் 48 கோடியும், கோவை பகுதியில் 48 கோடியும், சேலம் பகுதியில் 47 கோடியும் என்று விற்பனையாகி உள்ளது என்று தகவல்கள் வெளிவந்து உள்ளது.