Sunday, May 5, 2024
-- Advertisement--

அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்குக்கென்றே புதிய பயணசீட்டு…!!! அதிரடி காட்டும் தமிழக அரசு..!!!

அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நேற்று முதல் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கும் முறை தொடங்கியது. தமிழ்நாட்டு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி முதலமைச்சராக பதவியேற்றதும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையை வெளியிட்டார். இதன்பின் இலவச பயணம் மேற்கொள்பவர்களுக்கு என பிரத்தியேகமான பயணச்சீட்டு அடிக்கும் பணி நடைபெற்றது. இலவச பயணத்தை மேற்கொண்டு வந்த மகளிருக்கு நேற்று முதல் பேருந்தில் பயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தது.

எந்தெந்த வழித்தடங்களில் எத்தனை மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டனர் என்பதை கண்டறிய பயணச்சீட்டு வழங்கப்படுவதாக கூறியது. இந்நிலையில் இந்த நடைமுறை காலை முதல் அமலுக்கு வந்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles