Friday, May 3, 2024
-- Advertisement--

மாரடைப்பால் இறந்த கணவரின் உடலை கொரானா அச்சத்தால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட மனைவி..!! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..!! 1

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அத்தாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் சீராட்டி. இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் . அரசு மருத்துவமனை அருகில்செருப்பு தைத்து கொடுப்பவராக இருந்துள்ளார், இதனால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று இந்த பகுதி முழுவதும் வதந்தி பரவியதால் அவர் உடலை அடக்கம் செய்ய அவர் மனைவிக்கு அவரது உறவினர்கள் மற்றும் சுற்று உள்ளவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை, அக்கம்பக்கத்தினரும் கிருமி தோற்று அச்சம் காரணமாக முன்வரவில்லை.

இதனால் என்ன செய்வது என்று அறியாது அவதிப்பட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி சகோதரன் மற்றும் மகள் ஆகியோர் சதாசிவத்தின் உடலை பழம் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டியில் வைத்து தள்ளி சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இறந்த தன் கணவரின் உடலை தள்ளுவண்டியில் வைத்து முக்கிய சாலையில் அவர் செல்லும் பொழுது சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாருமே உதவிக்கு வரவில்லை, மாரடைப்பால் உயிரிழந்த ஒருவரின் உடல் இறுதி மரியாதை கூட செய்யாத நிலை உள்ளது. இப்படியே போனால் மக்களிடம் மனிதநேயம் காணாமல் போய்விடும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles