Saturday, April 27, 2024
-- Advertisement--

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா காலமானார்…!!! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராகவும், தமிழ்நாட்டில் ஆளுநராகவும் பதவி வகித்த கோனிஜெட்டி ரோசய்யா (88) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ரோசய்யா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ரோசையா மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவர் மிகுந்த அனுபவம் அறிவாற்றலும் கொண்ட மூத்த அரசியல் தலைவர் ஆவார்.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ரோசய்யா 2011 முதல் 2016 ஆண்டு காலத்தில் ஆளுனராக தமிழ்நாட்டில் இருந்தார். அப்போது மறைந்த முன்னாள் முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சியில் ஆளுநராக இருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles