தமிழ்நாட்டில் சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் வங்கியில் தங்களுக்கு சரியான கடன் உதவி கிடைக்கவில்லை என்றும் எங்களுடைய வியாபாரத்தைப் பெருக்க அல்லது தொடங்க கடன் உதவி செய்து தாருங்கள் என்று தமிழக அரசுக்கு பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.
சிறப்பாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்று இதற்கு தீர்வு ஒன்று வழங்க வேண்டும் என்பதற்காக இன்று அனைத்து வாங்கியாளர்களை அழைத்து கூட்டம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த மாநில அளவிலான வங்கியாளர் குழு சிறப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் சிறு குறு நிறுவனங்கள், மகளிர், உழவர், மீனவர்கள், மாணவர்கள், விளிம்பு நிலை மக்கள் குறித்து அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்கி அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர உத்தரவிட வேண்டுமென வங்கியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மாவட்டங்களுக்கு வருகை தரும் போது நேரடியாக கடன் உதவிகளை தானே வழங்குவேன் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மு க ஸ்டாலின் அவர்களின் இந்த செயலுக்கு மக்கள் அனைவரும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.