Friday, May 17, 2024
-- Advertisement--

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி..!!! அறுவை சிகிச்சை முடிந்தது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது . தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி. தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக பல ஆலோசனைகளை நடத்தி நேற்று சில கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தார். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேரத்தில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்தவர்.

குடலிறக்க அறுவை சிகிச்சை காரணமாக தற்பொழுது சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதல்வர் பழனிசாமி அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னதாகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்றபின் வீடு திரும்புவார் என்று கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles