Sunday, May 19, 2024
-- Advertisement--

தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழகத்துக்கு கிடைத்த பெருமிதம் இது..!! முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி..!!

தமிழகத்தில் என்னதான் நம் அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை எடுத்து வந்தாலும் அதைத் தொடர்ந்து அவரவர் பணிகளைச் சரியாகச் செய்வதாக அரசு தரப்பில் இருந்தும் பல்வேறு விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக தற்போது பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு உள்ளார் . அதில் அரசு அதிகாரிகள் பணியாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அர்பணிப்பினால் மற்றும் தமிழக மக்களின் ஒத்துழைப்பினால் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகியுள்ளது என கூறியுள்ளார்.

வருட வருடம் எடுக்கப்படும் இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கணக்கெடுப்பு நடைபெறும். இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாடு தொடர்ந்து 3 மூன்றாவது முறையாக சிறந்த மாநிலமாக தேர்வாகி உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி இந்த விருதினை நான் தமிழக மக்கள் அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன், தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு நாம் ஒற்றுமையாக உழைப்போம் என டுவிட் செய்துள்ளார். இந்த இந்த வெற்றியை தமிழக மக்கள் எல்லோரும் வரவேற்று வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles