தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளார் தமிழக வீரர் நடராஜன். இந்தியா, ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த வருடம் நடக்கும் மிக முக்கியமான கிரிக்கெட் தொடராக இது கருதப்படுகின்றது.
இதற்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்த அணியில் நேற்று முக்கியமான மாற்றங்கள் சில நடைபெற்றன. வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் சில வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்காக சேலத்தைச் சேர்ந்த தமிழக வீரரான நடராஜன் தேர்வாகியுள்ளார்.
இந்திய அணியில் இவர் முதல் முதலில் வலை பயிற்சி குழுவிற்காக தேர்வானார். தற்போது மொத்தமாக 15 பேர் கொண்ட அணியில் இவரும் ஒருவராக தேர்வாகியுள்ளார். இளம் வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
அவருக்கு பதிலாக நடராஜன் உள்ளே வந்துள்ளார். தமிழக வீரர் நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் நடராஜனும் முதல்வர் பழனிச்சாமியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நடராஜனுக்கு மிகவும் ஸ்பெஷலான வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.
அந்த வாழ்த்தில் முதல்வர் பழனிசாமி உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
நடராஜன் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் தமிழக மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடராஜன், எடப்பாடி நானும் ட்ரெண்டிங்கில் தான் உள்ளேன் என்பதை நிரூபித்து உள்ளார்.
நடராஜன் இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார், இந்த சீசன் முழுக்க இவர் 63 யார்க்கர் பந்துகளை போட்டு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.