தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகிறது. கட்சித் தலைவர்கள் அனைவரும் மக்களைப் பார்த்து வாக்குறுதி கொடுப்பது மற்றும் மக்களுடன் மக்களாக அமர்ந்து பேசி குறைகளைக் கேட்டு தெரிந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் மற்றொரு பக்கம் தயார் செய்து வருகிறார்களாம். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் இன்று பிப்ரவரி 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை கலைவாணர் அரங்கில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூபாய் 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று பன்னீர்செல்வம் அவர்கள் பேசி வருகிறார்.
இயற்கை மரணம் அடையும் குடும்ப தலைவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமெண்ட் செய்யுங்கள்.