Sunday, May 19, 2024
-- Advertisement--

இன்னும் ஓரிருநாட்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன…!!! தமிழக அரசு அறிவிப்பு.

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில் மதிப்பெண் விபரங்கள் மற்றும் தேர்வு முடிவுகளை இரண்டொரு நாளில் முதல்வர் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதை எடுத்து பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து கடந்த மாதம் 26ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மூன்று பாடங்களில் பெற்ற உயர் மதிப்பெண்களிருந்து 50% பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் எழுத்து தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்கள் இருந்து 20 சதவீதம் பிளஸ்-2 செய்முறைத்தேர்வு இருந்து 20 சதவீதம் மதிப்பெண்களை கொண்டு 100% களுக்கு மதிப்பீடு செய்யப்படும் என்றும் இந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணும் கணக்கிடப்பட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்து இருந்தார்.

அதற்கான அரசாணையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் மதிப்பெண்கள் வழங்கும் போது எந்த முறைகளை கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை தேர்வுத்துறை ஏற்கனவே கேட்டிருந்தது. அவற்றை பெற்று மேற்கண்ட அறிவிப்பின் படி பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் பணிகள் இரவு பகலாக நடந்தது.

தற்போது அந்த பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் இரண்டொரு நாளில் முதல்வர் மேற்கண்ட பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles