தமிழில் சரியான சொற்களை பயன்படுத்தாமல் நாளடைவில் தனது வசதிக்கேற்ப தமிழ்ச் சொற்களை எளிதாக்கி பேசி வருகின்றோம். தாய்மொழியான தமிழை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்கள். தற்பொழுது தூய தமிழில் 5000 ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழில் பேசுகின்ற தகுதி வாய்ந்த மூன்று தூய தமிழ்ப் பற்றாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் அத்துடன் ஒரு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் sorkuvai.com இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நாடறிந்த தமிழ்ப்பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ்ப்பற்றை உறுதி செய்து சான்றிதழ் பெற்று சுய விவரக் குறிப்புகள் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டுமென்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.