Monday, May 20, 2024
-- Advertisement--

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் பேசும் காவலர்கள் நியமனம்…!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றக்கூடிய காவலர்கள் தற்ப்போது தமிழ் பேசத் தெரிந்த காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் .

பொதுவாக தமிழகத்தைப் பொருத்தவரையில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் காவலர்கள் ஹிந்தி பேசக்கூடியவர்களாகவே இருந்து வருகின்றனர் என்பது அனைத்து விமான பயணிகளும் அறிந்ததே.

தற்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் பேசக்கூடிய காவலர்கள் நியமித்து இருப்பதாக சென்னை விமான நிலைய ஆணைக் குழு( மத்திய தொழிற் பாதுகாப்பு படை) தெரிவித்திருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவல் அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தி மொழி தெரியாததால் இந்தியரா என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட சர்ச்சை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles